search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் கோர்ட்டு"

    கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் மெயின் சாலையில் வசிப்பவர் ரத்தினம் (65). இவரது மகன் செல்வம் (30). இவர்களது குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ராசு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் செல்வம் அதே பகுதியில் சென்ற போது அவரை ராசு மகன் கண்ணதாசன் (42) வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வம் அதே இடத்தில் இறந்தார்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளி கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
    ×